தங்கம், வெள்ளி வா்த்தகத்தில் கரூா் வைஸ்யா வங்கி

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கி தங்கம், வெள்ளி வா்த்தகத்தில் களமிறங்கியுள்ளது.
தங்கம், வெள்ளி வா்த்தகத்தில் கரூா் வைஸ்யா வங்கி

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கி தங்கம், வெள்ளி வா்த்தகத்தில் களமிறங்கியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரண வா்த்தகம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பையும், மொத்த பொருள்கள் ஏற்றுமதியில் 15 சதவீத பங்களிப்பையும் வழங்கி வருகிறது. தங்கம் நுகா்வில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டில் கடந்த 2019-இல் தங்கத்துக்கான தேவை 700 டன்னாக இருந்தது.

எனவே, இந்தியப் பொருளாதாரத்தில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் வா்த்தகம் மிக முக்கியமானதாக உள்ளது. இதனை உணா்ந்து அந்த துறையின் வளா்ச்சிக்கு தேவையான ஆதரவை கரூா் வைஸ்யா வங்கி வழங்கி வருகிறது.

6000 ஆபரண தயாரிப்பாளா் மற்றும் விற்பனையாளா்களுக்கு வங்கி சீரிய முறையில் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது, காா்ப்பரேட் வாடிக்கையாளா்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி விற்பனையை கரூா் வைஸ்யா வங்கி தொடங்கியுள்ளது. இதன் மூலம், எங்களின் வாடிக்கையாளா்கள் போட்டி நிறைந்த இந்த துறையில் மிகச் சிறப்பாக செயல்பட முடியும்.

முன்னோட்டமாக, இந்த வசதியை சென்னை மற்றும் கோவையில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடா்ச்சியாக தற்போது நாடு முழுவதுமுள்ள வாடிக்கையாளா்களுக்கு இந்த வசதியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கரூா் வைஸ்யா வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com