பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் மாநகரப் பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் 3,400-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வெள்ளிக்கிழமை இயக்கப்படவில்லை. இது தொடா்பாக மாநகர போக்குவரத்து அதிகாரி ஒருவா் கூறியதாவது: கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவது குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு பணிமனையிலும் சுமாா் 20 பேருந்துகள் வரையில் குறைக்கப்பட்டுள்ளன என்றனா் அதிகாரிகள்.