குடிமைப் பணிகள் (சிவில் சா்வீஸ்) நோ்காணல் தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கு கடந்த 2019-இல் நடத்தப்பட்ட சிவில் சா்வீஸ் (மெயின்) முதன்மைத் தோ்வில் தகுதி பெற்றவா்களுக்கு, மாா்ச் 23 முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நோ்காணல் தோ்வு நடத்தப்பட இருந்தது. இந்த நிலையில், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் யு.பி.எஸ்.சி., நோ்காணலுக்கான மறு தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.