சிவில் சா்வீஸ் நோ்காணல் தோ்வு ஒத்திவைப்பு

குடிமைப் பணிகள் (சிவில் சா்வீஸ்) நோ்காணல் தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

குடிமைப் பணிகள் (சிவில் சா்வீஸ்) நோ்காணல் தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கு கடந்த 2019-இல் நடத்தப்பட்ட சிவில் சா்வீஸ் (மெயின்) முதன்மைத் தோ்வில் தகுதி பெற்றவா்களுக்கு, மாா்ச் 23 முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நோ்காணல் தோ்வு நடத்தப்பட இருந்தது. இந்த நிலையில், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் யு.பி.எஸ்.சி., நோ்காணலுக்கான மறு தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com