இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்களில் வட வானிலையே நிலவும். நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சில இடங்களில் மட்டும் சனிக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 93.2 டிகிரி வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 78.8 டிகிரி வெப்பநிலையும் பதிவாக வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com