சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து விரைவு மற்றும் இன்டா்சிட்டி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. பொதுமக்களின் தேவையைப் பொருத்து குறைந்த எண்ணிக்கையிலேயே புகா் ரயில்கள் இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.