நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகை: முதல்வர் அதிரடி நடவடிக்கை

நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழிசாமி தெரிவித்துள்ளார். 
நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகை: முதல்வர் அதிரடி நடவடிக்கை

நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழிசாமி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேவையில் இன்று 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வு எழுதும் மாணவர்களில், அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கபப்டும். 

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உள்ஒதுக்கீடு தொடர்பாக பரிசீலிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். இவ்வாணயம் அரசுப் பள்ளி மாணவர்கள், குறைவாக சேர்வதற்கான காரணங்களை ஆய்வு செய்து, ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும். 

பள்ளிக்கல்வி, சுகாதாரம், சட்டத்துறை செயலாளர்கள், 2 கல்வியாளர்கள் ஆணைய உறுப்பினர்களாக இருப்பர். சிறப்பு சட்டத்தில் வழங்கப்படும் உள்ஒதுக்கீடு எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com