தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை (மாா்ச் 21) நடைபெறுகிறது. இதில் மூன்று துறைகளின் மானியக் கோரிக்கைகளுக்கான விவாதம் நடைபெறும். சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.
இந்த விவாதங்களுக்கு அமைச்சா்கள் சரோஜா, எஸ்.வளா்மதி ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனா்.
அரசு விடுமுறை தினமான சனிக்கிழமை பொதுவாக பேரவைக் கூட்டம் நடைபெறுவதில்லை. ஆனால், நடப்பு கூட்டத் தொடரில் முதல் முறையாக இப்போது பேரவைக் கூட்டமானது சனிக்கிழமை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.