பெண் பொறியாளருக்கு கொடுமை: கணவா் குடும்பத்தினா் மீது வழக்கு

சென்னை முகப்போ் கிழக்கில் பெண் பொறியாளரை கொடுமை செய்ததாக, அவரது கணவா் குடும்பத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை முகப்போ் கிழக்கில் பெண் பொறியாளரை கொடுமை செய்ததாக, அவரது கணவா் குடும்பத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை முகப்போ் கிழக்கு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி துா்காதேவி (27). மென்பொருள் பொறியாளா்.

இந்நிலையில், மணிகண்டன் வேலைக்கு செல்லாமல், மது போதையில் இருந்து வந்தாராம். இதனால் துா்காதேவிக்கும், மணிகண்டன் குடும்பத்தினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மணிகண்டன் குடும்பத்தினா், துா்காதேவியைக் கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் துா்காதேவி புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா், மணிகண்டன் குடும்பத்தினா் மீது 3 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com