மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.
மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு


சென்னை: நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி வெளியிட்ட இந்த அறிவிப்பின் மூலம் 38வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை.

நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து, மயிலாடுதுறையைத் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று முதல்வர் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com