மயிலாடுதுறை புதிய மாவட்டமாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதை அதிமுகவின் வரவேற்றுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து, மயிலாடுதுறையைத் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று முதல்வர் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி வெளியிட்ட இந்த அறிவிப்பின் மூலம் 38வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை. இந்த நிலையில் மயிலாடுதுறை புதிய மாவட்டமாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதை வரவேற்று சீர்காழியில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.