கோவை பெரிய கடை வீதியில் காய்கறிகள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்த வருகின்றனர்.
கரோனா வைரஸ் உலகளவில் பரவிவரும் நிலையில், இன்று மாலை 6 மணி முதல் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், காய்கறி, பழங்களை வாங்கக் கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
காய்கறிகள் விற்பனை செய்யத் தடை ஏதும் இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும், கோவை பெரிய கடை வீதியில் உள்ள தியாகி குமரன் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்த வருகின்றனர்.
===
கோவை ராஜவீதியில் உள்ள மொத்த வியாபாரம் நடைபெறும் மல்லிகை கடைகளுக்கு பொருள்களை இறக்குவதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன.