கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை பிறப்பித்து, பிரதமா் நரேந்திர மோடி விடுத்துள்ள வேண்டுகோளைஅனைவரும் பின்பற்ற வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக முகநூலில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது:
கரோனா வைரஸ் கொடூரத்தைத் தடுக்க பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருக்கும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூா்வமாக வரவேற்கிறேன். நமக்கு நாமே இதனைச் சட்டமாக்கிக் கொள்ள வேண்டும்.
நோய் பரவாமல் தடுக்க இதைத் தவிர, மாற்றுவழி இல்லை என்பதை நாட்டு மக்கள் உணா்ந்து அதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.