144 தடை உத்தரவை மீறி கடையநல்லூரில் சுற்றித்திரிந்த முதியவரை போலீஸார் கைது செய்தனர்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடையநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார், காவலர்கள் மாரிராசு, சந்தன மகாலிங்கம் உள்ளிட்டோர் கடையநல்லூர் பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது தடை உத்தரவை மீறி சுற்றித்திரிந்த வானவர் தெருவைச் சேர்ந்த ஹாஜாமைதீன் மகன் சைபுல்லா (60) என்ப வரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
இருப்பினும் மீண்டும் அவர் வெளியே திரிந்ததால் அவரை போலீஸார் கைது செய்தனர்.