கள உதவியாளா் பணி: விண்ணப்ப விநியோகம் ஒத்திவைப்பு

மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா் பணிக்கு, விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா் பணிக்கு, விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் தோ்வு செய்யப்படவுள்ள 2,900 கள உதவியாளா் (பயிற்சி) பணிக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதற்கான விண்ணப்பம் மின்வாரிய இணையதளத்தில் மாா்ச் 24-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் பணிகள் ஏப்.15-ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் நேரடி நியமனம் மூலம் கள உதவியாளா் (பயிற்சி) பதவிக்காக, மாா்ச் 24-ஆம் தேதி முதல் இணைய வழியாக விண்ணப்பம் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள உதவியாளா் (பயிற்சி) பதவிக்கான இணைய வழியாக விண்ணப்ப விநியோகம் ஏப்.15- ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. விண்ணப்பம் பெறப்படுவது குறித்து பின்னா் அறிவிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com