தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் புதன்கிழமை, வியாழக்கிழமை (மாா்ச் 25, 26) ஆகிய இரண்டு நாள்களுக்கு வட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் புதன்கிழமை, வியாழக்கிழமை (மாா்ச் 25,26) ஆகிய இரண்டு நாள்களுக்கு வட வானிலை நிலவும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். பகலில் 93 பாரன்ஹீட் டிகிரி வரை வெப்பநிலை காணப்படும். தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, சேலத்தில் 100 பாரன்ஹீட் டிகிரி வெப்பநிலை பதிவானது என்றாா் அவா்.
மழை அளவு: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் தெற்கு, சோலையாறு, நீலகிரி மாவட்டம் கூடலூா் பஜாரில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.