சென்னை: சென்னையில் உணவு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்க தனியாருக்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
சென்னையில் தனியார் நிறுவனங்களோ, சமூக அமைப்புகளோ, ஏழை எளிய மக்களுக்கும், தேவைப்படுவோருக்கும் சமைத்த உணவுகளை நேரடியாக வழங்க சென்னை மாநகராட்சி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், உணவு வழங்க பொதுமக்கள் வெளியே வருவதும், அதனைப் பெற மக்கள் கூடுவதும், கரோனா பரவலை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தால் இந்த தடை உத்தரவை மாநகராட்சிப் பிறப்பித்துள்ளது.
மேலும், விரும்பினால் சமைக்கத் தேவையான பொருட்கள், முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை மாநகராட்சியிடம் தரலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.