கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு வழிச்சாலை சந்திப்பில் வடக்கு மண்டல ஐ.ஜி ஆய்வு மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதையடுத்து, வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் முத்துகடை நான்கு வழிச்சாலை சந்திப்பில் ஆய்வு செய்தார். அவருடன் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.மயில் வாகனன் உள்ளிட்ட உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 750 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.