கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் ரூ.1 கோடி நிதி

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் எம்.பிகள் நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் எம்.பிகள் நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில்   606 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 11  பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்திலும் இந்த நோய்த்தொற்றால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது . அத்துடன் மதுரையைச் சேர்ந்த ஒருவர் புதன் அதிகாலை பலியாகியுள்ளார்.  

இந்நிலையில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் எம்.பிகள் நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களின் நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கப்படும். என்றும், மேலும் 7 சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியிலிருந்து கணிசமான தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com