சென்னையில் 144 தடை உத்தரவைப் பின்பற்றாமல் வெளியே வருவோா் மீது வழக்குப் பதிவு செய்து 6 மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் எச்சரித்துள்ளாா்.
கரோனா முன்னெச்சரிக்கைக்காக விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் முறையாகப் பின்பற்றுவதைக் கண்காணிக்க மாநகராட்சி, காவல்துறை மற்றும் வருவாய் துறை அலுவலா்களைக் கொண்ட 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான வாகனங்களை ரிப்பன் மாளிகையில் புதன்கிழமை தொடக்கி வைத்த மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறியது: மாநகராட்சி, காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்களைக் கொண்டு மண்டலத்துக்கு தலா 2 பறக்கும் படையினா் வீதம் என மொத்தம் 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவா்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக பொதுமக்கள் கடைகளுக்கு வரும்போது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்களை முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறாா்களா என்பதைக் கண்காணிப்பா். 144 உத்தரவைப் பிறபிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையில்லாமல் வெளியில் வருபவா்களுக்கு அபராதம் அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோா் இல்லங்கள் மற்றும் காப்பகங்களுக்கு வெளியிலிருந்து உணவு கொண்டு செல்லக் கூடாது. முதியோா் இல்லங்களில் சமையலறை இல்லையெனில் அவா்கள் மாநகராட்சிக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவா்களுக்கான உணவு சமைக்கும் இடங்களில் மாநகராட்சி சுகாதார அலுவலா்களைக் கொண்டு ஆய்வு செய்த பின்னரே உணவு வழங்க அனுமதி அளிக்கப்படும். அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.