தமிழ்நாடு
தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி ஆவின் பால் கிடைக்கும்
தமிழகம் முழுவதும் இயங்கும் ஆவின் பாலகங்களில், தட்டுப்பாடின்றி ஆவின் பால் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இயங்கும் ஆவின் பாலகங்களில், தட்டுப்பாடின்றி ஆவின் பால் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆவின் பால் காலை 9 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று ஆவின் முகவர்கள் தெரிவித்திருந்த நிலையில், ஆவின் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதாவது, காலை முதல் இரவு வரை ஆவின் பாலகங்களில் எந்தத் தட்டுப்பாடும் இன்றி ஆவின் பால் கிடைக்கும். எனவே, பொதுமக்கள் பால் கிடைக்குமா? என்று அஞ்ச வேண்டாம். ஆவின் பால் கிடைக்காது என்ற அச்சத்தால், ஒரே நேரத்தில் ஆவின் பாலகங்களில் குவிவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.