தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸுக்கு 27 பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்துடன் தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.
லண்டனில் இருந்து சென்னை வந்த 24 வயது இளைஞர், 65 வயது பெண் ஆகியோருக்கு கரோனா உறுதியானது என்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இருவரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேசமயம் தமிழகத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியான நிலையில் 2 பேர் பாதிப்பிலிருந்து குணடைந்துள்ளனர். இதனிடையே கரோனா நோய்த் தடுப்புக்காக போா்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அரசின் சாா்பில் ரூ.3780 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.