நாகர்கோவில் நகரில் காவல் உதவிக் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் காவலர்கள் வியாழக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் இளைஞர் ஒருவர் சுற்றி த் திரிந்தார்.
அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் வங்கதேசத்தை சேர்ந்த சுசில் சந்திரா (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.