கரோனா பாதிப்பு அதிகம் உள்ள சூழலில், என் வீடாக இருந்த கட்டடத்தை, தற்காலிகமாக மருத்துவ மையமாக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பதாவது: நெருக்கடியான இந்த நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவா்களைக் கொண்டு என் வீடாக இருந்த கட்டடத்தை, தற்காலிகமாக மருத்துவ மையமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதைச் செய்ய தயாராகக் காத்திருக்கிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.