தம்மம்பட்டியில் சாலை முழுவதும் கிருமி நாசினி மஞ்சள் நீரைத் தெளிக்கும் மக்கள்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழரின் பாரம்பரியத் நோய் தடுப்பு முறைகளான மஞ்சள் கலந்த தண்ணீரிரை வீடுகளில் தம்மம்பட்டி பகுதியில் மக்கள் தினமும் தெளிக்கத் தொடங்கினர். 
தம்மம்பட்டியில் சாலை முழுவதும் கிருமி நாசினி மஞ்சள் நீரைத் தெளிக்கும் மக்கள்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழரின் பாரம்பரியத் நோய் தடுப்பு முறைகளான மஞ்சள் கலந்த தண்ணீரிரை வீடுகளில் தம்மம்பட்டி பகுதியில் மக்கள் தினமும் தெளிக்கத் தொடங்கினர். 

மேலும் பலர் இதனுடன் வேப்பிலைச் சாற்றை கலந்து வீடுகளிலும், வாசல்களிலும் தெளிக்கத் தொடங்கியுள்ளனர். சிலர் டிராக்டர்களில் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீரை தம்மம்பட்டி சாலைகளில் வியாழக்கிழமை தெளித்தனர். 

கூலி வேலை செய்பவர்கள் தங்கள் வீடுகளின் வாசற் படிகனில் வேப்பிலைக் கொத்துகளை சொறுகி வருகின்றனர். இது பற்றி அவர்கள் கூறும்போது, எங்களுக்கு தெரிந்த பழைமையான நோய்க்கிருமி தடுப்பு முறைகளைத்தான் செய்துள்ளோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com