அகில இந்திய 144 தடை உத்தரவை அடுத்து, கர்நாடக மாநிலம், பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டதால் பெங்களூரிலிருந்து கால்நடையாக கிருஷ்ணகிரி வழியாக சாரைசாரையாக திருவண்ணாமலை நோக்கி தமிழக தொழிலாளர்கள் செல்கின்றனர்.
பெங்களூருவில் இருந்து லாரி மற்றும் சில சரக்கு வாகனங்களில் ஏறி கிருஷ்ணகிரிக்கு வந்ததாகவும் பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி வர ஒரு நபருக்கு ரூ.500 செலவானதாகத் தெரிவித்தனர்.
பெங்களூருவில் இருந்து புறப்பட்ட இவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகளான கிருமி நாசினி கொண்டு கை கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.