சென்னை: கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கரோனா பாதிப்பில் இருந்து காக்கும் வகையிலும், அதிலிருந்து மீளவும் தமிழக அரசானது பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், விரிவான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. இதற்கு உதவிடும் வகையில் எனது ஒரு மாத ஊதியம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் ஆளுநா் தெரிவித்துள்ளாா்.