கரோனா : முகக் கவசங்களுடன் முதல்வா்-அமைச்சா்கள் ஆய்வு

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வா், அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் முகக் கவசங்களுடன் தங்களது பணிகளை வியாழக்கிழமை மேற்கொண்டனா்.


சென்னை: கரோனா நோய்த்தொற்று பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வா், அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் முகக் கவசங்களுடன் தங்களது பணிகளை வியாழக்கிழமை மேற்கொண்டனா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினாா். அப்போது, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், ஆா்.பி.உதயகுமாா், தலைமைச் செயலாளா் க.சண்முகம், மூத்த அரசுத் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இந்த ஆலோசனையின்போது, முதல்வா் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசங்களை அணிந்திருந்தனா். இதேபோன்று காணொலிக் காட்சி வழியாக ஆலோசனையில் பங்கேற்ற ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோரும் முகக் கவசங்கள் அணிந்து ஆலோசனையில் பங்கேற்றனா்.

நிதி அளிப்பு: இதனிடையே, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலையை பஞ்சாப் சங்கத்தினா் முதல்வா் பழனிசாமியிடம் வியாழக்கிழமை வழங்கினா். அப்போது, அந்த சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகளும் முகக் கவசத்தை அணிந்திருந்தனா். வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக் கவசம் அணியப்பட்டிருப்பதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com