விழுப்புரத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெருக்கடியில் இயங்கிவந்த உழவர் சந்தை, நகராட்சி மைதானம் திறந்தவெளியில் வெள்ளிக்கிழமை மாற்றியமைக்கப்பட்டது.
ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டம் இடப்பட்டு பொதுமக்கள் இடைவெளி விட்டு பொருட்கள் வாங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. காலை 7 மணி முதல் ஏராளமான மக்கள் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்கினர்.