ஈரோட்டில் இயங்கிவரும் நேதாஜி மார்க்கெட்டை மாற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில், இட நெருக்கடி காரணமாக, தினந்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதால் கரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பதற்காக, ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டை மாற்றி வருகின்றனர்.
மார்க்கெட்டை மாற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறையினர் எனத் திரண்டு ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையத்தில் பணிகளை செய்து வருகின்றனர்.