சென்னை: உணவகங்கள், மளிகைக் கடைகள் இயங்க நேர வரம்பு ஏதும் நிா்ணயிக்கப்பட வில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தி்னாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அதிகாரப்பூா்வமாக வெளியே தெரிவிக்கப்படுவதற்கு முன்பாக சமூக ஊடகங்களில் உணவகங்கள், காய்கறி கடைகள் இயங்கும் நேரம் குறித்த தகவல்கள் வெளியாகின. அவை சில காட்சி ஊடகங்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டன. காய்கறிகள் கடைகள் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மளிகைக் கடைகள் காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரையிலும், உணவகங்கள் காலையில் 7 முதல் 9 வரையும், மதியம் 12 முதல் 2.30 மணி வரையிலும், இரவு மாலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே இயங்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், தமிழக அரசு அந்தச் செய்திகளை முற்றிலும் மறுத்துள்ளது.
நேர வரம்பு ஏதுமில்லை: இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட விளக்கம்: உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் பொருள்களை நேர வரம்பின்றி நாள் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.