இந்தோனேசியாவில் சிக்கியுள்ள 430 தமிழ் குடும்பங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், இந்தோனேசியாவில் 430 தமிழ் குடும்பங்கள் சிக்கித் தவிக்கின்றார்கள். அவர்கள் தமிழகத்திற்குத் திரும்ப விரும்புகிறார்கள். எனவே, அவர்களை மீட்க பிரதமர் மோடி மற்றும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தோனேசிய தமிழ் சங்கத்தினர் அனுப்பி கடிதத்தையும் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.