தமிழ்நாடு
கரோனா: தேனியில் துணை முதல்வர் ஆலோசனை
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்து அதிகாரிகளிடம் துணை முதல்வர் கேட்டறிந்தார்.
மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜேந்திரன், தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.