புதுச்சேரி புதுச்சேரி சட்டப்பேரவை இன்று பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையில் கூடியது.
4 மாத செலவீனங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் வே.நாராயணசாமி தாக்கல் செய்தார். ஊரடங்கு உத்தரவை கருத்தில் கொண்டு என் ஆர் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என அக்கட்சித் தலைவர் என். ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.
எப்ரல், மே, ஜுன் மாதங்களுக்கான ரூ.2,042 கோடிக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.