சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் உறவினர்கள் 10 பேருடன் முகக்கவசம் அணிந்து மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.
காரைக்குடியைச் சேர்ந்த ராமு-உலகம்மாள் மகன் பெரியசாமிக்கும், காரைக்குடி அருகே கல்லல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் - வள்ளி மகள்
கிருஷ்ணவேணிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு 2020 மார்ச் 30 திங்கள் கிழமை காரைக்குடி கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் நடத்த திட்டமிருந்தனர்.
தற்போது கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் சமூக விலகலை கடை பிடிக்க மத்திய அரசு 144 தடையுத்தரவு நடைமுறைப்படுத்தியிருப்பதால் மணமக்கள் தங்களது உறவினர்கள் 10 பேர்களுடன் கோயிலுக்கு வந்தனர். அங்கு அம்மன் முன்னிலையில் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.
பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். கரோனா வைரஸ் காரணமாக எளிய முறையில் திருமணத்தை நடத்தினர்.