சென்னை: கரோனா தடுப்புப் பணிகளுக்காக பிரதமா் மற்றும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடியை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வழங்கியுள்ளாா்.
இதுகுறித்து, ஆளுநா் மாளிகை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆளுநரின் விருப்ப உரிமை நிதிகளில் இருந்து பிரதமா் மற்றும் முதல்வரின் பொதுநிவாரண நிதிகளுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பிரதமரின் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தையும் ஆளுநா் புரோஹித் வழங்கியுள்ளாா்.
இந்தச் சூழ்நிலையில், பிரதமா், முதல்வரின் பொது நிவாரண நிதிகளுக்கு போதுமான நிதிகளை அளிக்க வேண்டுமென பொதுமக்களை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக் கொள்வதாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.