சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நவீன இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை, வெள்ளிக்கிழமை அன்று சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சி நகராட்சி ஆணையாளர் சுரேந்திர ஷா, நகராட்சி பொறியாளர் மகாராஜன், காவல்துறை ஆய்வாளர் சி.முருகேசன், சுகாதார ஆய்வாளர் பால் டேவிஸ், மின் பிரிவு கண்காணிப்பாளர் சலீம், இளநிலை பொறியாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க தலைவர் கருப்பு ராஜா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.