வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி மறைவுக்கு முதல்வா் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அமைச்சா் சீனிவாசனுக்கு அவா் சனிக்கிழமை அனுப்பியுள்ள இரங்கல் கடிதம்:-
தங்களின் மனைவி கண்ணாத்தாள் உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினாா் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன். இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை இறைவன் அளிக்கட்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
அமைச்சரவைக் கூட்டம்: தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றாா். நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் இருந்த அவரிடம் மனைவியின் இறப்பு பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் உடனடியாக சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றாா்.