விழுப்புரம் மாவட்டத்தில் இருவருக்கும், கள்ளக்குறிச்சியில் ஒருவருக்கும் சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அனந்தபுரம் அருகே உள்ள கொனலூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இவர்கள் கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளிகளாக வேலை பார்த்து ஊருக்குத் திரும்பியுள்ளனர். சந்தேகத்தின்பேரில் பரிசோதனை செய்ததில் இருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கோயம்பேட்டில் பணியாற்றிவந்த தொழிலாளர் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.