மருங்காபுரியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருள்கள்

திருச்சியில், மருங்காபுரி ஒன்றியம் மினிக்கியூர் ஊராட்சியில், திமுக சார்பில் ஊராட்சிமன்ற..
மருங்காபுரியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருள்கள்

திருச்சியில், மருங்காபுரி ஒன்றியம் மினிக்கியூர் ஊராட்சியில், திமுக சார்பில் ஊராட்சிமன்ற தலைவர் பொதுமக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, முதன்மை செயலாளர் கே.என்.நேரு மற்றும் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவரம்பூர் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ்பொய்யாமொழி வழிகாட்டுதலில், திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் மினிக்கியூர் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பு முருகன், ஊராட்சி செயலர் முருகன், கப்பல் சதீஷ்க்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி என வழங்கப்பட்டது. 

மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மருங்காபுரி ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, மாவட்ட விவசாய அணி செயலர் மகாதேவன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய பொருளாளர் கருணாநிதி மற்றும் மினிக்கியூர் ஊராட்சி திமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சி தூய்மை காவலர்களுக்குக் குளிர்பானங்களை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com