ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கரோனா நிவாரண உதவியாக வில்லரசம்பட்டி மற்றும் நசியனூர் கிராமங்களில் உள்ள 100 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசியுடன் 17 உணவுப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு ஈரோடு வட்டாட்சியர் பரிமளாவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. மேலும் நசியனூர் பேரூராட்சியைச் சேர்ந்த 45 சுகாதார மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.