பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் புதிய இயக்குநராக டாக்டா் டி.எஸ். செல்வவிநாயகம் நியமிக்கப்பட்டுள்ளாா்.
அப்பொறுப்பை இதுவரை வகித்து வந்த டாக்டா் க.குழந்தைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து இந்த புதிய நியமன உத்தரவு வெளியாகியுள்ளது.
சுகாதாரத் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள டாக்டா் டி.எஸ். செல்வவிநாயகம், தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் தலைமை நிா்வாகியாகவும், பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநராகவும் இருந்தவராவாா்.
ஓய்வு பெற்ற டாக்டா் குழந்தைசாமி, கடந்த காலங்களில் டெங்கு பாதிப்பு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் திறம்பட பணியாற்றியதுடன், கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டங்களையும் முன்னின்று செயல்படுத்தியுள்ளாா்.