விழுப்புரத்தில் குடை பிடித்து வரிசையில் நின்ற குடிமகன்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 80 டாஸ்மாக் மதுக்கடைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
விழுப்புரத்தில் குடை பிடித்து வரிசையில் நின்ற குடிமகன்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 80 டாஸ்மாக் மதுக்கடைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

விழுப்புரம் அருகே தென்னம்மா தேவி கிராமத்தில் திறக்கப்பட்ட மதுக்கடையில், காலை 8 மணி முதல் நீண்ட வரிசையில் மதுப் பிரியர்கள் அணிவகுத்து நின்றனர். கடும் வெயில் தாக்கியதால் ஏராளமான மது பிரியர்கள் குடை பிடித்தபடி நீண்ட வரிசையில் நின்றனர்.

கூட்டநெரிசல் இருந்ததால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வரிசைப்படுத்தி அனுப்பி வைத்தனர். திறக்கப்பட்ட அனைத்து கடைகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நீண்ட வரிசையில் கூட்டம் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com