நெய்வேலி என்.எல்.சி பாய்லா் விபத்து: காயமடைந்த 8 பேரில் ஒருவர் பலி

நெய்வேலி என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் காயமடைந்த 8 பேரில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி பலியானார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

நெய்வேலி என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் காயமடைந்த 8 பேரில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி பலியானார். 

கடலூர் மாவட்டம் நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 6 ஆவது யூனிட்டில் மின் உற்பத்தியின்போது பாய்லர் திடீரென வெடித்தது. உடனடியாக தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அவர்களில் ஒருவர் இன்று சிகிச்சைப் பலனின்றி பலியானார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com