நெய்வேலி என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் காயமடைந்த 8 பேரில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி பலியானார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 6 ஆவது யூனிட்டில் மின் உற்பத்தியின்போது பாய்லர் திடீரென வெடித்தது. உடனடியாக தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அவர்களில் ஒருவர் இன்று சிகிச்சைப் பலனின்றி பலியானார்.