கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வருகிற 13 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், வருகிற மே 17 ஆம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக மே 13 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். அந்தந்த மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்வார் எனத் தெரிகிறது.