காஞ்சிபுரத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் 9, வாலாஜாபாத் 10, ஸ்ரீபெரும்புதூர் 10, குன்றத்தூர் 75, காஞ்சிபுரம் நகரில் 26 உட்பட மொத்தம் 126 பேர் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் திங்கட்கிழமை மட்டும் ஐந்து பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.