பின்னத்தூர் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பின்னத்தூர், பின்னத்தூர் நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாற்பத்தைந்து நாள்களுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி மிகவும் வறுமை கோட்டில் இருந்ததை அறிந்த ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி முருகையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் முருகையன் ஆகியோர் தலா 5 கிலோ அரிசி, தலா 5 கிலோ காய்கறிகளை வழங்கினர்