நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தை சார்ந்த பகுதியில் முயல் வேட்டைக்கு வலை விரித்த 3 பேர்களை வனத்துறையினர் இன்று கைது செய்தனர்.
இங்குள்ள அகதியம்பள்ளி பகுதியில் வலை விரித்து காட்டு முயல்களை பிடிக்க சிலர் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையிலான குழுவினர் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், ராஜேஷ், கலைச்செல்வம் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இவர்களுக்கு தலா பத்தாயிரம் அபராதம் விதித்தனர்.