பாரதிய ஜனதா கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பொத்தூர் ஊராட்சியில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் செவ்வாய்க்கிழமை (மே.12 ) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயனாளிகள் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை வர்த்தக அணி இணை அமைப்பாளர் ஜெயக்குமார் செய்து இருந்தார்.