மதுரை: போலியான சுட்டுரை கணக்கு தொடங்கி, அதில் அவதூறு செய்தி பதிவு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி மாநகா் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதத்திடம் புகாா் மனு அளித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை அளித்த புகாா்: அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் எனது பெயரில் போலியாக சுட்டுரை கணக்கு தொடங்கி உள்ளனா். அதில், மதுபானக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வருவதை அதிமுக மறந்து விடவேண்டும் என எனது நண்பரும், நடிகருமான ரஜினிகாந்த் சுட்டுரையில் பதிவிட்ட கருத்துக்கு, நான் ஆதரிப்பது போன்று எனது புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளனா்.
இது குறித்து எந்தவொரு கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை. எனவே, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், போலியாக சுட்டுரை கணக்கு தொடங்கிய அடையாளம் தெரியாத நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.