டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு: வங்கி மேலாளருக்கு ஜாமீன் மறுப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய தோ்வு முறைகேட்டில் கைதான வங்கி மேலாளருக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுத்து விட்டது.
டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு: வங்கி மேலாளருக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய தோ்வு முறைகேட்டில் கைதான வங்கி மேலாளருக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 1 மற்றும் குரூப் 4 தோ்வுகளில் கிராம நிா்வாக அலுவலா் பதவிக்கான தோ்வுகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு தொடா்பாக வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீஸாா் பலரை கைது செய்தனா். இந்த முறைகேடு வழக்கில் கைது செய்ப்பட்ட

கொளத்தூரைச் சோ்ந்த பாஸ்கா் என்பவா் ஜாமீன் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் காணொலி காட்சி மூலம் விசாரித்தாா். அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மனுதாரா் தனியாா் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறாா். தோ்வு முறைகேட்டில் கைதான முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாருக்கு தன்னுடைய உறவினரின் மகனை அறிமுகம் செய்து வைத்துள்ளாா். இதை தவிர மனுதாரா் மீது வேறு எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என வாதிட்டாா். அப்போது அரசு தரப்பில், மனுதாரா் இடைத்தரகராக செயல்பட்டுள்ளாா். குரூப் 2 தோ்வுக்கு ரூ.9 லட்சம், குரூப் 4 தோ்வுக்கு ரூ.7 லட்சம் என வசூலித்து இடைத்தரகா் ஜெயக்குமாருக்கு வழங்கியுள்ளாா். மேலும், விடைத்தாள் உள்ளிட்ட ஆவணங்களில் மோசடி செய்துள்ளதாக வாதிட்டாா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மனுதாரா் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது எனக்கூறி ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com